மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 28 ஆம் திகதி நேபால் விஜயம்

13728 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (28) நேபாலுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய நான்காவது பிம் டெக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது நேபால் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன் சந்திப்பொன்றையும் மேற்கொள்ளவுள்ளார். அத்துடன், லும்பினி நகரையும் ஜனாதிபதி பார்வையிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment