சம்பள முரண்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில்

232 0

சம்பள முரண்பாட்டு ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண்பது இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கமாகும். சம்பளப் பிரச்சினைகளைக் குறைத்தல் மற்றும் சம்பளக் கட்டமைப்பொன்றை உருவாக்குதல் போன்ற இவ்வாணைக்குழுவினால் நிறைவேற்றப்படவுள்ளன.

எஸ்.ரனுக்கே என்பவரின் தலைமையில் இயங்கவுள்ள இவ்வாணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு மாத காலத்துக்குள் ஆணைக்குழுவின் தீர்வு யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பின் பின்னர் அவர்களது சம்பள முரண்பாட்டுக்கும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment