ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மோசடி விசாரணைக்கு கோத்தா

248 0

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மிகின் எயர் ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை விசாரணைக்காக அழைத்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனம் மற்றும் மிகின்லங்காவில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராயும் ஆணைக்குழுவே கோத்தபாய ராஜபக்சவை விசாரணைக்காக அழைத்துள்ளது.

ஆகஸ்ட் 29 ம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக சமூகமளிக்குமாறு ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேபோன்று முன்னாள் அமைச்சர் சஜின்வாஸ் குணவர்த்தன மற்றும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோரையும் ஜனாதிபதி ஆணைக்குழு வாக்குமூலம் பெறுவதற்காக அழைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிர்வாகத்தில் ஸ்ரீலங்கா எயர்லைன்சின் முகாமைத்துவத்தில் இந்த நால்வரும் முக்கிய பொறுப்பிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் பணிப்பாளர் சபையில் முக்கிய உறுப்பினராக பணியாற்றியிருந்தார்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து யூன் மாதம் விசாரணைகளை ஆரம்பித்த ஜனாதிபதி ஆணைக்குழு பல முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளது.

Leave a comment