ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

211 0

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் எதிர்வரும் செப்டம்பர் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (21) உத்தரவிட்டார்.

அவர்கள் இருவரும் இணைந்து தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a comment