திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் 08 பேர் கைது

247 0

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் 08 பேர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 45 வயதுகளுக்கு இடைப்பட்ட வெலிக்கந்த, கதிர்காமம் மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கண்டி, புஷ்பதான மாவத்தை, படஹிரகந்தை பிரதேசத்திற்கு அருகில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a comment