புலிகளின் ஆயுதம் வைத்துள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்- சமிந்த விஜேசிறி

196 0

நாட்டில் ஆயுதம் வைத்திருக்க வேண்டியவர்கள் பாதுகாப்புத் துறையினர் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பவராக இருந்தாலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் எல்.ரி.ரி.ஈ. அமைப்பினரிடம் காணப்பட்ட ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

Leave a comment