இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இந்திய இலங்கை உடன்படிக்கை குறித்து வலுவான நம்பிக்கையை கொண்டிருந்தார் என முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி பிரவீன் தவார் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவின் சிறுபான்மையின மக்களிற்கான தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினராக உள்ள பிரவீன் தவார் இந்த கருத்தினை ஏசியன் ஏஜில் பதிவு செய்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் 57 நாடுகளிற்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ள போதிலும் இந்தியாவின் அயல்நாடுகளுடனான உறவு முன்னெர் எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமானதாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி இந்தியாவின் வெளிவிவகார கொள்கையை இராஜதந்திர முதிர்ச்சியுடன் கையாண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி பிரதமரான வேளை இலங்கையில் நிலவரம் மோசமடைந்துகொண்டிருந்தது அரசவன்முறை தீவிரமடைந்துகொண்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தமிழ்நாட்டு மக்களின் ஆன்மாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ள பிரவீன் தமிழ்நாட்டு மக்கள் தமிழர்களிற்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும் என விரும்பினர்,பதுடில்லி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான அழுத்தங்களை கொடுத்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது ராஜீவ்காந்தி அந்த உடன்படிக்கை தமிழர்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் இலங்கையின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றையும் பாதுகாக்கும் எனவும் கருதினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்திய இலங்கை உடன்படிக்கை குறித்து பலர் விமர்சனங்களை முன்வைத்தபோதிலும் அது குறுகியகால நீண்ட கால நோக்கங்களை அடைய உதவியது,எனினும் அதன் நோக்கம் சாத்தியமாவதற்கு பல வருடங்கள் எடுத்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதற்காக பெரும் விலையை செலுத்தவேண்டியிருந்தது:ராஜீவ்காந்தியின் பெறுமதி மிக்க உயிர்: எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.