கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

242 0

அவிசாவளை பகுதியில் உள்நாட்டு கைத்துப்பாக்கி மற்றும் ஒருத்தொகை துப்பாக்கி ரவைகளுடன்  இளைஞர் ஒருவரை அவிசாவளை பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாலேகம பகுதியில் சீதாவாக்க சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காக அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 26 வயதுடைய அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரிடமிருந்து கைத்துப்பாக்கியொன்றும் துப்பாக்கி ரவைகள் 16 மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றினுடைய இலக்கத் தகடொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞரை அவிசாவளை நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய வேளையில் அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment