கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க ஏற்பாடு

237 0

பொலிஸாரின் சித்திரவதைக்கு ஆளாவோர் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விஷேட பொறுப்பொன்று வழங்கப்பட்டுள்ளதாக   அவ்வாணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி சட்டத்தரணி கலாநிதி மாரின்க சுமணதாஸ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுகின்ற நபர்களுக்கு பொலிஸாரால் சித்திரவதை வழங்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்பன சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் மூன்று ஆண்டுகளை இலக்காக கொண்டு நாட்டில் மனித உரிமைகள் சம்பந்தமான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Leave a comment