சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தரொருவர் வீடு திரும்பவில்லை!

203 0

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தரொருவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி நெல்லியடிப் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கரணவாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த எஸ்.பவிந்திரகுமார் (வயது- 55) சந்நிதி முருகன் கோயிலில் வியாபாரம் செய்யவுள்ளதாகக் கூறி கடந்த மாதம் -22 ஆம் திகதி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இதுவரை அவர் வீடு திரும்பவில்லை எனவும் மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

Leave a comment