பஸ்ஸின் மீது, ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து, கல்வீச்சு!

243 0

தங்கல்லயிலிருந்து கொழும்பு நோக்கி, இன்று (18) காலை பயணித்த தனியர் பஸ்ஸின் மீது, ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து, கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே, இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் காரணமாக பஸ்ஸின் முன் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment