ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து விலகி எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கோர முடியும்!

189 0

மஹிந்த அணி­யினர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து விலகி சுயா­தீ­ன­மாக பாரா­ளு­மன்­றத்தில் செயற்­பட்டால் அவர்கள் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கோர முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து வில­கினால் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை இழந்­து­வி­டு­வார்கள் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச ­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மஹிந்த அணி­யி­ன­ருக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி வேண்­டு­மானால் அவர்கள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து வில­க­வேண்டும். அவ்­வாறு வில­கினால் அந்த முன்­ன­ணியின் செயலர் அதனை சபா­நா­ய­க­ருக்கு அறி­விப்பார்.

ஆனால் அங்கு ஒரு சிக்கல் உள்­ளது. அதா­வது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து மஹிந்த அணி­யினர் விலகி சுயா­தீ­ன­மாக பாரா­ளு­மன்­றத்தில் செயற்­பட்டால் அவர்கள் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கோர முடியும்.

எனினும் அவர் கள் அவ்­வாறு ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து வில­கினால் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை இழந்­து­வி­டு­வார்கள். அப்போது நாட்டில் புதிய அரசியல் நிலைமை உருவாகும் என்றார்.

Leave a comment