புதிய கட்சி ஆரம்பிக்கப்போகிறாராம் கருணா

261 0

download-14கருணா  என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆதரவாளர்களை இணைத்து புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அவர் தனது புதிய கட்சியை கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வியியலாளர்கள், புத்திஜீவிகளை இணைத்தே ஆரம்பிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனவும் கருணா என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ அதிபராக இருந்தபோது கருணாவுக்கு சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் கூட்டு எதிரணியினருக்கே கருணாவின் புதிய கட்சி ஆதரவு வழங்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.