ஹெரோயினுடன் 8 பேர் கைது

275 0

மாத்தளை மற்றும் தம்புள்ளை பொலிஸார் நேற்று (13) மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸ் உத்தியோகத்தர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மாத்தளை பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து 4 இடங்களில் ஹெரோயின் பாவித்துக் கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளை பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை மாத்தளை மற்றும் தம்புள்ளை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment