மகாவலி கங்கையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

267 0

மகாவலி கங்கையில் மிதந்து வந்த சடலமொன்றை கட்டுகஸ்தோட்டை பொலீஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.கண்டி, பொல்கொல்லை பிரதேசத்தில் மகாவலி நீர்த்தேகத்தில் வடிந்தோடும் நீருடன் சேர்ந்துள்ள குப்பைகளுக்குள்  குறித்த சடலம் காணப்படுள்ளது.

இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலீஸாருக்கு தகவல் கிடைத்த்தை அடுத்து  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குறித்த சடலத்தின் சில பாகங்கள் பழுதடைந்துள்ளதுடன் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் இதுதொடர்பான்  நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment