புகையிர ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்த அமைச்சரவை பத்திரம்-மஹிந்த அமரவீர

249 0
புகையிர ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை சம்பந்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்று இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

அதன்படி அந்த பத்திரத்தை ஆய்வு செய்வதற்காக ஒரு வார காலம் பிற்போடப்பட்டதென்று அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டம் இன்று காலை 09.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி கடந்த 05 நாட்களாக புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a comment