மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன(காணொளி)

336 0

மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை,விமலசுரேந்திர,காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்;டுள்ளன.

மத்திய மலைநாட்டிலுள்ள ஒரு சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக கடுமையான மழை பெய்துவரும் காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த இரு தினங்களாக பெய்து குறித்த பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவந்த மழையினால், நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்துள்ளன.

இதனால் மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக இன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டன.

விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலாக நீர் வெளியாகுவதுடன், மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவுகள் திறக்கப்பட்டன.

அத்தோடு  காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment