முல்லைத்தீவில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு (காணொளி)

616 0

செஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு, ஆவணி மாதம் 14ஆம் திகதி கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 12ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

படுகொலை இடம்பெற்ற முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a comment