இலங்கையில் கரையொதுங்கி மருத்துவ கழிவுப் பொருட்கள்

231 0

இலங்கையின் வடமேற்கே புத்தளம் கடற்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மருத்துவ கழிவுப் பொருட்கள் கரையொதுங்குவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த தகவலை இந்திய ஊடகம் ஒன்று இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.

அதன்படி காலாவதியான மருந்துகள், மருந்துப் போத்தல்கள், ஊசிகள் மற்றும் பொலித்தீன் பைகள் என்பன பெருமளவில் கரையொதுங்குவதாக அந்த ஊடகம் தகவல் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் அந்த கழிவுப் பொருள்கள் காலாவதியானதால் இந்தியாவில் கொட்டப்பட்டிருக்கலாம் என தெரிவித்திருக்கும் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் இவை மிகவும் அபாயகரமானவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்ற மருந்துக் கழிவுகள் யாழ்ப்பாணம் வடகடலில் கரையொதுங்கியமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Leave a comment