இன்று தனது கடமைகளை ஆரம்பிக்கும் அரச கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு

191 0

அரச கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு இன்று கடமைகளை ஆரம்பிப்பதாக அதன் தலைவரான கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எதிர்காலத்தில் கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு பதிலாக அரச கணக்காய்வாளர் அலுவலகம் என்ற பெயர் பயன்படுத்தப்படும் என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான சட்டம் மிகவும் வலுவானது எனவும் ஆணைக்குழுவின் மூலம் முதன்முதலாக கண்டறியப்பட்ட துஷ்பிரயோகங்கள் பற்றி ஆரம்பத்தில் விசாரிக்கப்படவுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

Leave a comment