ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சிக்கல் உள்ளதாகவும், அத்தண்டனை பாரதூரமானது என்றே கருதுவதாகவும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை மக்கள் நன்கு அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள அபேகம வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஞானசார தேரருக்கு எதிரான தீர்ப்பை அவசியம் மேன்முறையீடு செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.