நான் மதுபானம் அருந்துபவன் அல்ல, இதனால் விலை அதிகரிப்பு பிரச்சினையில்லை- மஹிந்த

250 0

நான் மதுபானம் அருந்துவதில்லையென்பதனால் மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு பிரச்சினையில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அபே கம வளாகத்தில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தங்களுடைய கருத்து என்னவென ஊடகவியலாளர் ஒருவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியதற்கு, தான் மதுபானம் அருந்தாதவன் என்பதனால், விலை அதிகரிப்பு எனக்குப் பிரச்சினையில்லையென தெரிவித்தார்.

Leave a comment