நீர் தாங்கியினுள் விழுந்து பாடசாலை மாணவி பலி

231 0

தனமல்வில, ஊவா குடா ஓயா பகுதியில் நீர் தாங்கியினுள் விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளது.

ஊவா குடா ஓயா பகுதியை சேர்ந்த தனமல்வில ஆரம்ப பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 8 வயதுடைய அமாஷி விந்தீவரி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது வீட்டில் நீர் நிறைத்து வைத்திருந்த தாங்கி ஒன்றில் விழுந்து குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாங்கியில் விழுந்திருந்த குறித்த சிறுமியை தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், சடலம் தனமல்வில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment