புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்

209 0

இன்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரையில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறும் என புகையிரத சாரதிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படாமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

Leave a comment