பிரான்ஸ் செல்ல முற்பட்டவர்கள் கைது!

218 0

சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்படடுள்ளனர். 21 பேரும் கொழும்பு துறைமுககாவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்கள் மற்றும் 19 ஆண்கள் அடங்குகின்றனர். இவர்கள் கடந்த 2ஆம் திகதி பிரான்ஸில் உள்ள தீவு ஒன்றுக்கு செல்வதற்காக தயாரானதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதென காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடல் எல்லையில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டோரா படகுகள் இரண்டு சந்தேகத்திற்கிடமான முறையில் பயணிக்கும் போது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து படகினை சோதனையிட்ட போது அவர்கள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு பிரான்ஸ் செல்வதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment