ஜனநாயகத்தை அரசாங்கம் இல்லாதொழித்து வருகின்றது- ஜி.எல்

196 0

கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக சூழலை இந்த அரசாங்கம் இல்லாதொழித்து வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகளான  ஐவன் டோஹடி,  டேவிட் மெக்ராட்ஸ் ஆகியோருடன் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நேற்று(04) இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைக் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தேசிய அரசாங்கத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாது ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment