சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

219 0

இரத்தினபுரி பிரதேசத்தில் அனுமதி பத்திரம் இன்றி அகழ்வுப் பணியில் ஈடுபட்ட07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கஹவத்தை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி இரத்தினபுரி, மல்வல பிரதேசத்தில் இரண்டு இடங்களில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அகழ்வுப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையின் இரத்தினபுரி காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment