இந்திய நடிகர் சல்மான்கானை சிக்கலில் மாட்டி விட்ட நாமல்

272 0

625-500-560-350-160-300-053-800-900-160-90-1கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இந்திய நடிகர் சல்மான்கான் மற்றும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் இலங்கை வருகை தந்திருந்தனர்.

அவர்களின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக 45 மில்லியன் ரூபா திறைச்சேரியின் மூலம் செலுத்தப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.

நாமல் ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய அவரது ஒருங்கிணைப்பாளர்கள் இந்த இருவரையும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

கலாசார மற்றும் கலை ஊக்குவிப்பிற்கான வேலைத்திட்டம் என கூறி இந்த கொடுப்பனவு திறைசேரியின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய மோசடி தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அப்போதைய காலப்பகுதியில் இடம்பெற்ற முறைக்கேடுகளுக்குள் இந்த சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பல சாட்சிகள் சேகரிக்கும் போது குறித்த நடிகை மற்றும் நடிகர்களின் சொத்துகள் தொடர்பில் தகவல் பெற்றுக்கொள்ள ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.