கூட்டமைப்பின் நிலைப்பாடு ஏனைய தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர்-மஹிந்த

193 0

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரும் விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிலைப்பாட்டை, கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுடன் கலந்துரையாடி சபாநாயகருக்கு அறிவிப்பதாக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment