வலம்புரிச் சங்குடன் நால்வர் கைது

197 0

1 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய வலம்புரிச் சங்குடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை தலைமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உவர்மலை மட்டிக்களி பிரதேசத்தில் வியாபார நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட வலம்புரி சங்குடன் நால்வரை சந்தேகத்தின் அடிப்படையில் தாம் கைது செய்ததாக தலைமைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து 1 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய வலம்புரி சங்கை தாம் கைப்பற்றியதாக அவர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிண்ணியா, மூதூர் மற்றும் திருகோணமலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பயணம் செய்ய பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களையும் வலம்புரி சங்கையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்

Leave a comment