ஊடக சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தாதீர்- மைத்திரிபால சிறிசேன

266 0

ஊடக சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி மற்ற மனிதர்களது ஆடைகளைக் களைய முயற்சிக்கும் ஊடக நிறுவனங்கள் வழங்கப்பட்ட சுதந்திர ஆடையைக் கழற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த நாட்டில் வழங்கப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதில் சில ஊடக நிறுவனங்கள் மனித நேயத்தை மீறிச் செயற்படுகின்றது.

இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் முழு அளவில் வழங்கப்பட்டுள்ளது. இதனை வைத்துக் கொண்டு ஜனாதிபதியை கீழ்த்தரமான வார்த்தைகளைக் கொண்டு எழுதுகின்றனர். சில இணைத்தளங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்து ஜனாதிபதியின் ஆடைகளைக் கழற்றிக் காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன். தவறான செயற்பாடுகளினால் வழங்கப்பட்ட சுதந்திரத்தின் ஆடையைக் கழற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

பொலன்னறுவையில் இன்று (02) இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற எழுச்சி பெறும் பொலன்னறுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment