சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிரணி கொண்டு வந்தால், அந்த பிரேரணைக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் அமைச்சருமான ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர பார்க்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சி கோரட்டும். அதில் எமக்கு பிரச்சினையில்லை. எனினும் ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் உள்ளார். அதில் எந்தவொரு மாற்றமும் வராது.
ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் உள்ளனர். இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எப்படி எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவது.
மேலும் எக்காரணம் கொண்டும் கருஜயசூரியவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்குவதற்கு இடமளிக்கமாட்டோம் என்றார்.