நாளை வேலை நிறுத்தம் உறுதி – வைத்தியர் சங்கம் அறிவிப்பு

183 0

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் நாளை (03) காலை 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வேலைநிறுத்தம் மேற்கொள்வதற்கான 10 காரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த கோரிக்கைகள் தொடர்பில் நியாயமான கரிசனை கட்டப்படாததால் குறித்த வேலைநிறுத்தம் உறுதியாகியுள்ளதாக GMOA வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை காலை 8 மணி முதல் 24 மணி நேரங்களுக்கு இந்த வேலை நிறுத்தம் இடம்பெறவுள்ளது. எனினும், அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை சேவைகள் தடையின்றி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment