
மட்டக்களப்பு ஆனந்தா ஒழுங்கையில் சாரதி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய சோமசிறி விஜித் ஜெயந்த் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றவரை பின்தொடர்ந்த இருவர், இவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் ஒரு மணி நேரத்தில் மட்டக்களப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


