தற்போதைய அரசாங்கம் நாட்டின் அனைத்து வளங்களையும் வௌிநாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
நாட்டின் வளங்களை பாதுகாக்கும் தேவை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைக் கூறினார்.