போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

192 0

பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் போதை பொருள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்கஹவெல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 70 போதை மாத்திரைகள் மற்றும் 84 கிராம் கேரளா கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தள்ளது.

பொல்கஹவெல பிரதேசத்தினை சேர்ந்த 51 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Leave a comment