பிரேசில் நாட்டிற்குறிய போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அந்த கடவுச்சீட்டின் ஊடாக மீண்டும் பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்படும் போது விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
31 வயதுடைய ஈரான் நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.