சில பிரதேசங்களுக்கு 09 மணி நேர நீர் வெட்டு

175 0

கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு இன்று (28) இரவு 9.00 மணி முதல் 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

அதன்படி இன்று இரவு 9.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை இவ்வாறு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று அந்த சபை தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, றத்மலான, களுபோவில, நெதிமால உட்பட நுகேகொட ஆகிய பிரதேசங்களில் நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்துடன் ராஜகிரிய ரோயல் பார்க், லேக் கார்டன், பண்டாரநாயக்கபுர, பெலவத்த மற்றும் முல்லேரியாவ ஆகிய பிரதேசங்களிலும் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

இதுதவிர கொழும்பு 05 பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment