அரசியல் தலைவர்கள் தான் இனவாதத்தை உருவாக்கியது-ராஜித

331 0

இலங்கையினுல் இனவாதத்தை உருவாக்கியது மக்கள் இல்லை, அரசியல் தலைவர்கள் தான் என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் பலத்தை பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு கீழ் தனமான வேலையை செய்தாவது ஆட்சியை பிடிப்பதற்கு இவ்வாறு இனவாதம் தூண்டிவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழ் மக்களுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது எனவும் இவ்வாறான மனநிலை இருந்தால், பிரச்சினைகளைத் தீர்த்த முன்னோக்கி செல்லக்கூடிய சூழ்நிலை முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment