விஜயகலாவை ஒரு போதும் கைது செய்யப்போவதில்லை-உதய கம்மன்பில

226 0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை ஒரு போதும் தற்போதைய அரசாங்கம் கைது செய்யப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தேசிய நூலகம் ஆவணவாக்கல் சேவைகள் சபை அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபருக்கு ரீட் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி நீதிமன்றத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக அரசாங்கம் விசாரணை நடத்தும் விதத்தை பார்த்தால் இதற்கு தீர்வு கிடைக்காது என்றும் இதனால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது கஷ்டமான விடயம் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படுத்துவதற்கான வழியை உருவாக்கி வருகிறது எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (25) இடம்பெற்ற ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான லெப்டினட் கொமண்டர் பீ.பி.எஸ். ஹேமச்சந்திர எழுதிய “நந்திக்கடல் வரை பாதையை அமைத்தது யார்?” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment