கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்க நடவடிக்கை-அகிலவிராஜ்

230 0

புத்தகங்களை வாசிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைப்பதற்கு தேவையான வேலைத் திட்டங்களை வகுக்கும் யோசனை ஒன்று ஜனாதிபதியிடம் முன் வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

கொழும்பு, வெலிக்கட சிறைச்சாலையில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

புத்தகங்களை வாசித்தால் அவர்கள் விமர்சனம் அல்லது சுருக்க ஆய்வு செய்து சமர்பிக்க வேண்டும் என்பதுடன், அது ஒரு மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக் காலத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க யோசனை முன்வைப்பதாக அமைச்சர் கூறினார்.

தற்போதைய சமுதாயத்துடன் மாற்றமடையும் புதிய எண்ணங்கள் ஊடாக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

Leave a comment