நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

297 0

மஹவெல, கல்கடுல்ல ஆற்றில் குளிக்க சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கல்கடுவ பாலத்திற்கு அருகில் குளிக்க சென்ற நபர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அகுரம்பட, வெந்தேசியாய பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று (26) நடைபெற உள்ளது.

Leave a comment