லண்டன் செல்ல முற்பட்ட தேரரை விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்

231 0

லண்டன் செல்வதற்காக விமானத்திற்கு ஏறிய சந்தர்ப்பத்தில் வணக்கத்திற்குரிய உடுவே தம்மாலேக தேரர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். 

வெளிநாடு செல்வதற்கு நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட திகதி பற்றிய சர்ச்சை காரணமாகவே அவர் இவ்வாறு விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.

லண்டனில் இவ்வார இறுதியில் நடைபெற உள்ள சொற்பொழிவு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு செல்வதற்காக தம்மாலேக தேரர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது வெளிநாடு செல்ல அனுமதி இல்லை என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் அவர் விமானத்தில ஏற்றப்பட்டுள்ளார்.

பின்னர் விமானம் செல்வதற்கு சிறிது நேரம் இருந்த போது மீண்டும் நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட திகதி பற்றிய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து அவர் மீண்டும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.

அவர் மறுபடியும் விகாரைக்கு வந்துள்ளதுடன் அவருடைய சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாகவும் அவர் அத தெரண செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு கண்டு பின்னர் வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பதாகவும், பெறுமையாக இதனை தாங்கிக் கொள்ளும் சக்தி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment