கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் குற்றச் செயல்கள் குறைவு- பொலிஸ்

246 0

கடந்த ஆறு மாத காலத்துக்குள் 252 மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தவறான ஆண், பெண் உறவு, பாதாள உலக செயற்பாடுகள், பழைய சம்பவங்களுக்கு பழிவாங்கள் போன்ற நடவடிக்கைகள் இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முழுவதும் 452 மனித படுகொலைகள் இடம்டபெற்றுள்ளன. இதனுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் இக்குற்றச் செயல்களில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு  3368 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்வருடத்தின் கடந்த ஆறு மாத காலத்துக்குள் 1503 சம்பவங்களே பதிவாகியுள்ளன.

கடந்த வருட குற்றச் செயல்களில் பாலியல் துஷ்பிரயோகம் செயல்கள் 1732 பதிவாகியிருந்தன. இவ்வருடத்தின் கடந்த ஆறு மாத காலத்துக்குள் 857 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களே பதிவாகியுள்ளதாகவும், ஒப்பீட்டு ரீதியில் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் குற்றச் செயல்களில் குறைவைக் காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment