ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க வேலைத்திட்டங்கள்

275 0

20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரி விகாராதிபதியை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருப்பதும் ஜனாதிபதியை தெரிவு செய்யும் உரிமையை மக்களிடம் வழங்காமல் இருப்பதுமே 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை தெரிவு செய்யும் உரிமை பாராளுமன்றத்திடம் வழங்கப்பட்டு அதிக வாக்குகள் பெறப்படுபவரே ஜனாதிபதியான நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment