ஒஸ்டின் பெர்னாண்டோ இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகராக நியமனம்

235 0

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஒஸ்டின் பெர்னாண்டோ இலங்கை அரச நிருவாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றிவர். பாதுகாப்பு அமைச்சு உட்பட பல அமைச்சுக்களில் செயலாளராகவும்  கடமையாற்றி விட்டு தற்பொழுது ஓய்வுபெற்றுள்ள ஓர் அரச அதிகாரியே இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment