வவுனியாவில் கடை உடைத்து திருட்டு

329 0

வவுனியா, வைரவபுளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றை நேற்று இரவு இனம் தெரியாத நபர்கள்  உடைத்து, அங்கிருந்த 20 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த கடையின் உரிமையாளர் நேற்று இரவு வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு இன்று  மீண்டும் திறப்பதற்காக சென்ற போதே, கடையின் பூட்டு உடைக்கபட்டு பணம் களவாடப்பட்டதை அறிந்து கொண்டார்.

இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment