கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை

228 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.

ஹம்பாந்தோட்டை, மதமுலனவில் அமைந்துள்ள டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணத்தில் இடம்பெற்ற அரசாங்க நிதி துஸ்பிரயோகம் தொடர்பிலேயே இவர்களுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கைகளை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளதாக இதன்போது நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரி அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டதற்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment