பாராளுமன்றத்திற்கு மக்கள் தீ வைக்க சொன்னால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை-ஐயந்த சமரவீர

278 0

பாராளுமன்றத்தில் நாளை (20) சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்ட மூலத்தால் பாராளுமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் ஒரு நாளாக, நாளைய நாள் கருதப்படும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின், தேசிய அமைப்பாளர் ஐயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் முப்படையினரையும் இல்லாதொழிக்கும் மூன்றாவது சட்ட மூலமாக இது அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சட்ட மூலத்தினால் இராணுவ வீரர்களை எந்தவொரு நாட்டிற்கும் அனுப்பி வைக்கவும், சிஐடி விசாரணை அறிக்கைகளை யாருக்கும் வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment