புகையிரத சேவை இன்று மாலை வழமைக்குத் திரும்பலாம் – புகையிரத திணைக்களம்

210 0

மலையக புகையிரத சேவை இன்று மாலை வழமைக்குத் திரும்பும் எனப் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு பேராதனை மற்றும் பிலிமதலாவ பிரதேசங்களுக்கு இடையிலான புகையிரத மார்க்கத்தில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் தெலி் இருந்த எரிபொருள் தாங்கிய பெட்டி ஒன்று கவிழ்ந்துள்ளது.

எரிபொருள் தாங்கிய பெட்டியை புகையிரத தண்டவாளத்துடன் இணைப்பதற்காகக் கொழும்பில் இருந்து இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், இன்று மாலையாகும் போது புகையிரத சேவை வழமைக்குத் திரும்பலாம் எனப் புகையிரத மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

புகையிரதம் தடம்புரண்ட காரணத்தால் இன்று காலை கொழும்பில் இருந்து பதுளை வரை பயணிக்க இருந்த பொடி மெனிக்கே புகையிரத சேவையையும் இரத்து செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment